திருமணம் நிச்சயக்கப்பட்ட மணப்பெண் திடீர் மாயம்..!

கோவை கணபதி சி .எம். எஸ். ஸ்கூல் பின்புறம் உள்ள ஆர். .டி. நகரை சேர்ந்தவர் முருகானந்தம் . இவரது மகள் ஹரிதா (வயது 27) கணபதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கரூரைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வருகிற 26 ஆம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற ஹரிதா மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தந்தை முருகானந்தம் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.