15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது..!

கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் 15 வயது மாணவி .இவர்  அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமியின் உறவினராக 17 வயது சிறுவன் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு சென்று வந்தார்.இதனால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுவன் அந்த மாணவியிடம் திருமண ஆசை காட்டி பேசி வந்தார். மேலும் அடிக்கடி மாணவியை வெளியூர் அழைத்துச் சென்று வந்துள்ளார் .இந்த நிலையில் மாணவியை சிறுவன் கடத்திச் சென்று பெற்றோருக்கு தெரியாமல் ஒரு கோவில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் வாடைக்கு வீடு எடுத்து சிங்காநல்லூரில் குடும்பம் நடத்தி வந்தனர். இதனால் மாணவி 5 – மாத கர்ப்பமானார். பின்னர் பரிசோதனைக்காக மாணவியை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது . இது குறித்து அரசு மருத்துவமனை சார்பில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் போலீசார் 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பின்னர் அவர் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்..