வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட யூ-டியூப் பிரபலம் டிடிஎப் வாசன் மீது வழக்குபதிவு ..!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டி.டி.எப். வாசன். இவர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு அதை வீடியோவாக பதிவு செய்து யூ.டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் பிரபலமடைந்ததோடு பல சர்ச்சைகளும் சிக்கினார். மேலும் அவ்வப்போது வன்முறை தூண்டும் வகையில் சில கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார் .இந்த நிலையில் டிடிஎப் வாசன் ஒரு யூ டியூப் செய்தி சேனல் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்துவேன் என கூறி ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார் . இது குறித்த புகாரின் பேரில் காரமடை போலீசார் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக டி.டி.எப் வாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..