புதரில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு..!

கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வீரபாண்டி பிரிவில் உள்ள மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள புதரில் குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்டுள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் பெரியநாயக்கன் பாளையத்திலுள்ள அரசு பொது மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். இதில், ரத்தக் கறை கூட சுத்தம் செய்யப்படாத நிலையில் இருந்ததால் குழந்தை பிறந்து 5 மணி நேரம் இருக்காலம் எனத் தெரியவந்துள்ளது. மேலும், குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.