கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 15.09.2022 – ஆம் தேதி VKL நகர் அருகே உள்ள ஒரு குப்பை தொட்டியில் துண்டாக வெட்டப்பட்ட ஆணின் இடது கை கிடைத்ததை அடுத்து துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர புலன் விசாரணை செய்து இவ்வழக்கில் தொடர்புடைய பெண் உட்பட மூன்று நபர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் குற்றவாளியான கார்த்திக் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின் கீழ் கொலை வழக்கு குற்றவாளியான கார்த்திக் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான அமுல்திவாகர் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.