வீட்டின் முன் கோலம் போட்டு கொண்டிருந்த பெண் டாக்டரின் 7 பவுன் தாலி செயின் பறிப்பு.!!

கோவை அருகே உள்ள மணியக்காரன் பாளையம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி பேபி கவிதா ( வயது 52 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 5 – 30 மணிக்கு இவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு  இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். அப்போது செயினை அவர் இறுக பிடித்துக் கொண்டார். இதனால் தாலி செயின் அறுந்து 4 பவுன் நகையுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். 3 பவுன் செயினை டாக்டர் பேபி கவிதா இருக பிடித்துக் கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..