ரூ.50 லட்சம் கொடுத்தால் ரூ. 1 கோடி தருவதாக இரடிப்பு மோசடி: கணவன் கைது – மனைவி தலை மறைவு..!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பட்டி ப்புலம் மீனவ பகுதியை சேர்ந்தவர் ராஜா வயது 50 இவரது மனைவி துளசி வயது 42 இவர்கள் இருவரும் சுற்றுப்புற பகுதிகளிலும் சென்னை பகுதியைச் சேர்ந்தவர்களிடம் குறிப்பாக பெண்களிடம் எங்களிடம் பணத்தை கொடுத்தால் இரட்டிப்பாக பணத்தை தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி பணத்தை பெற்றுள்ளனர். சென்னை நொச்சி குப்பத்தை சேர்ந்த சுதாகர் மனைவி நித்தியா வயது 38 என்பவர் தன் தங்கை மைதிலி மூலம் கடந்த 2021ம் ஆண்டு 25 பெண்களிடம் ரூ 5 கோடி ரூபாய் வரை வசூலித்து ராஜா துளசி தம்பதியிடம் கொடுத்துள்ளனர் . அத்தோடு தம்பதி இருவரும் தீபாவளி சீட்டு நடத்தி பணம் வசூலித்து உள்ளனர். ஆனால் உறுதி அளித்தபடி அசல் இரட்டடிப்பு பணத்தை தராமல் ஏமாற்றி உள்ளனர். மேலும் தீபாவளி சீட்டு பணத்தை ஏமாத்தி உள்ளனர். பணத்தை திருப்பி கேட்டவர்களை பெட்ரோல் குண்டு வீ சி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தவர்கள் ராஜாவின் வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டப்பட்டு கணவனும் மனைவியும் தலை மறைவாகி விட்டனர். இதையடுத்து நித்தியா மாமல்லபுரம் போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக முட் செடியில் பதுங்கி இருந்த ராஜாவை கைது செய்தனர் .தலைமறைவாக உள்ள துளசியை தேடி வருகின்றனர்..