வீட்டின் பூட்டை உடைத்து தங்க, வைர நகைகள் திருட்டு..!

கோவை ஒண்டிப்புதூர் எஸ். ஐ. எச். எஸ். காலனி பக்கம் உள்ள வி. சி. ஆர். கார்டனை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 66) லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மயிலாடுதுறைக்கு சென்றார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 14 பவுன் தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது .இது குறித்து சந்திரசேகரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் பார்வதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.