கோவையில் முதியோர் இல்லத்தில் மூதாட்டி திடீர் மாயம்..! 

கோவையில் முதியோர் இல்லத்தில் மூதாட்டி திடீர் மாயம்..!  கோவை ராமநாதபுரம் புலியகுளம்ரோட்டில் அன்னை தெரசா இல்லம் என்ற பெயரில் முதியோர்கள் இல்லம் உள்ளது .இங்கு கடந்த சில மாதங்களாக தங்கி இருந்தவர் சொர்ணம் (வயது 78) இவர் கடந்த 10-ந் தேதி முதியோர் இல்லத்திலிருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. இது குறித்து அந்த இல்லத்தின் பொறுப்பாளர் காருண்யா லதா இராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.