தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவச் சிலை, மணிமண்டபம் அமைக்க அறிவித்த முதல்வருக்கு நன்றி..!

தஞ்சாவூர்: தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவச் சிலை,மணிமண்டபம் அமைக்க அறிவித்த முதல்வருக்கு நன்றி!…… பரமக்குடி மட்டுமல்லாது சென்னையிலும் மணிமண்டபம் அமைக்க தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தமிழ் நாடு அரசுக்கு கோரிக்கை.. சாதி ஒழிப்பு போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 66-வது நினைவு நாள் நிகழ்ச்சி விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் தஞ்சையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அ.ரெ.முகிலன் தலைமை வகித்தார். விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா , ஆதித்தமிழர் பேரவை கட்சியின் மூத்த தலைவர் நாத்திகன், இளைஞர் அணி தலைவர் வ.பிரேம்குமார், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட துணை செயலாளர் ரெ.கார்த்திக், மார்க்ஸ் பெரியார் படிப்பு வட்ட நிறுவனர் லூர்துசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநகர செயலாளர் கா‌.அண்ணாதுரை, அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக மாவட்ட தலைவர் ஏ.சுரேஷ், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் நா.பாரதி, வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் மோகன், விடுதலை தமிழ் புலி கட்சியின் மாநிலச் செயலாளர் போராளி, மாநிலத் துணை பொது செயலாளர் தளபதி சுரேஷ், மாவட்ட தலைவர் எஸ். ஏ. பி சேவியர்,மாநகர செயலாளர் தமிழ், மாவட்ட பொறுப்பாளர் கிளின்டன், திருவையாறு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், பூதலூர் ஒன்றிய செயலாளர்கள் ஸ்டாலின், தமிழன் காமராஜர், மாநகர பொறுப்பாளர்கள் கிஷோர்,மில்லர், ஷாம் ,சத்யா, பிரகாஷ், எத்திராஜ்,பரணி, ஜான்,மாநில ஊடக பிரிவு செயலாளர் சாக்கோட்டை ராஜா, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.ஆர் சந்திரன், ஓட்டுநர் பிரிவு பொறுப்பாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் மாநகராட்சி இடத்தில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்ற அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் சென்னை தலைநகரில் மெரினாவில் சாதி ஒழிப்பு போராளி தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு திருவுருவ சிலை உடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ்நாடு அரசுக்கு வைக்கப்பட்டது.