இரும்பு கடையில் திருட்டு – கோவை பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் கைது..!

கோவை குனியமுத்தூர் நகரை சேர்ந்தவர் ஜலால் ( வயது 61 )செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று அவரது கடையில் இருந்த 45 கிலோ பழைய இரும்புகளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஜலால் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வபுரம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் குமார் ( வயது 19) விக்னேஷ் என்ற சின்ன விக்கி (வயது 22) ஹரி பிரசாத் (வயது 24) ஆகியோர்  கைது செய்தனர். இவர்களில் ஹரிப்பிரசாத். பி காம், சி.ஏ. பட்டதாரி ஆவார்.