கோவையில் புதிய வகை போதைப் பொருள் விற்ற இரண்டு பேர் கைது

கோவையில் புதிய வகை போதைப் பொருள் விற்ற இரண்டு பேர் கைது

கோவை மாவட்டம் மதுவிலக்கு பிரிவு போலீசார் தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது. அப்பொழுது அங்கு வந்த சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னும் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்பொழுது அவர்கள் விற்பனை செய்வதற்காக சிறிய அளவிலான குப்பிகள் ஆரஞ்சு நிறத்திலான பெயர் தெரியாத 300 மில்லி கிராம் எடை கொண்ட போதை பொருள் பாக்கெட்டில் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் அந்த போதைப்பொருள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசாருல் இஸ்லாம், அப்துல் முத்தலீப் என்பதும் கோவை தொண்டாமுத்தூரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 300 மில்லி கிராம் போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் வைத்திருந்தது ஹெராயின் போதை பொருளா ? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். அவ்வாறு ஹெராயின் போன்று இல்லாமல் புதிய வகை போதை பொருள் போன்று உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவையில் புதிய வகையான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் ஒருவர் கூறும் போது:-

அசாருல் இஸ்லாம் மற்றும் அப்துல் முத்தலீப் ஆகியோர் வைத்திருந்தது என்ன வகையான போதை பொருள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் பல்வேறு போதை பொருள் பவுடர் கலந்து போன்று புதிய வகை போதைப் பொருள் போன்று உள்ளது. அதன் நிறமும் ஆரஞ்சு நிறத்தில் உள்ளது அதன் மதிப்பு ரூபாய் 16,000 இருக்கும் அது என்ன வகையான போதைப்பொருள் என்பதை கண்டறிய கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ரசாயன பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனை முடிந்து வந்த பின்னரே அது என்ன போதைப் பொருள் என்பது தெரியவரும். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.