திருச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அனுப்பி வைத்தார்…

தூத்துக்குடிக்கு திருச்சி மாவட்டத்திலிருந்து முதல்கட்டமாக ரூ.7.67 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக ரூ.5.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில், பிரட், பிஸ்கெட், பால் பவுடா், தண்ணீா் பாட்டில்கள், ரொட்டிகள், நாப்கின், மெழுகுவா்த்தி, தீப்பெட்டி, கொசுவா்த்தி, படுக்கை விரிப்புகள், தலையணை, துண்டு, கோரைப் பாய் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் லாரி மூலம் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தேவநாதன், ஆட்சியரின் நோமுக உதவியாளா் (பொது) சரண்யா, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் கங்காதாரணி உள்ளிட்டோா் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்தனா்.