ஏசியிலிருந்து விஷவாயு கசிந்து,13 ஊழியர்கள் மயக்கம்…

சென்னை அருகே பெருங்குடியில் தனியார் வங்கியில் இரவு நேர பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏசியிலிருந்து விஷவாயு கசிந்ததாகவும் இதனை அடுத்து 13 ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏசியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத வாயு கசிந்ததாகவும் இந்த வாயு கசிந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊழியர்கள் நலமுடன் இருப்பதாகவும் இன்று அல்லது நாளை அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.