வட மாநில பெண் தூக்கு போட்டு தற்கொலை…

கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் ஹிட்டிஸ் சிங். இவரது மனைவி சங்கீதா தேவி (வயது 25)இவருடைய சொந்த ஊர் குஜராத் மாநிலம். இவர்கள்குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்கள்.இந்த நிலையில் திடீரென்றுஇவரது தந்தை ஊருக்கு செல்வதை நிறுத்தி டிக்கெட்டை ரத்து செய்து விட்டார்,இதனால் மனம் உடைந்த சங்கீதா தேவிநேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து அவரது அண்ணன் சீதன் சிங் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.