ஆட்டோ டிரைவர்கள் மோதல் .ஒருவர் படுகாயம்…

கோவை துடியலூர் அருகே உள்ள கே. வடமதுரை , பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 56) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வடமதுரையில் உள்ள ஒரு பேக்கரி முன் தனது ஆட்டோவை நிறுத்தி இருந்தார் .அப்போதுஇவருக்கும் அங்கு வந்தமற்றொரு ஆட்டோ டிரைவரான அதே பகுதியைச் சேர்ந்த ராமன் (வயது 46) என்பவருக்கும்வாய் தகராறு ஏற்பட்டது. இதில்ஆத்திரமடைந்த ராமன் செல்வராஜை சரமாரியாக தாக்கினாராம். இதில்செல்வராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .இது குறித்து துடியலூர் போலீசில்புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ராமனை கைது செய்தனர் .இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஆகும்.