குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு…

கோவை அருகே உள்ள சுகுணாபுரம், செந்தமிழ் நகரை சேர்ந்தவர் பூமிநாதன் ( வயது 38) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார்.இவர் வேலை இல்லாத நாட்களில் நாகராஜபுரம் குளத்தில் மீன் பிடிக்க செல்வார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை,இதுகுறித்து அவரது மனைவி நந்தினி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.போலீசார் தேடி பார்த்தபோது பூமிநாதன் குளத்தில் பிணமாக மிதந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவர் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கி இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.