கோவை போலீஸ் உதவி கமிஷனர் திடீர் மரணம்…

கோவை மாநகர காவல் துறையில் குற்ற பதிவேடு கூடம் (சி.ஆர்.பி) உதவி கமிஷனராக பணியாற்றி வந்தவர் சதீஷ் (வயது 53 )இவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது .இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் அவருக்கு சேலம் மருத்துவமனையில் “டயாலிசிஸ்” செய்யப்பட்டது. அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவரது சொந்த ஊர் சேலம் ஆகும்..அங்கு அவரது உடலுக்கு கோவை மாநகர ( தலைமையிடம்)துணை போலீஸ் கமிஷனர் சுஹா சினி. உதவி கமிஷனர் தங்கம் மற்றும் போலீஸ் அதிகாரிகள்மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். போலீஸ் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.