கார் தீ விபத்து: கோவையில் பரபரப்பு 

கார் தீ விபத்து: கோவையில் பரபரப்பு

கோவை பீளமேடு அருகே கார் தீப் பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு 11 மணி அளவில் பீளமேடு ஹோப் கல்லூரி அருகே நின்று கொண்டு இருந்த கார் முன் பக்கம் தீ பிடிக்க ஆரம்பித்தது. பின்னர் தீ டயரில் பற்ற ஆரம்பித்த நிலையில் கார் முழுவதும் தீ பரவியது. இதனால் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த நிலையில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ‘தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். காரில் எலக்ட்ரிக் சர்க்யூட் ஏதேனும் தீ பற்றியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று பற்றி எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின .