கயிறு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : ரூ 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்..

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள ஜமீன் கோட்டம் பட்டியில் தனியாருக்கு சொந்தமான கயிறு தொழிற்சாலை உள்ளது .இங்கு 25 -ம் தேதி அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்தது.தீ மள, மள வென பரவியது. இதில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள கயிறு எரிந்து நாசமானது .இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இதுகுறித்து அதன் உரிமையாளரான சிங்காநல்லூர் சிவனேஷ் ( வயது 35 ) கோட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.உயர் மின் அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.