கோவை ஒண்டிப்புதூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து..!!

கோவை அருகில் உள்ள ஒண்டிப்புதூர் 57-வது வார்டில் மாநகராட்சி நுண்ணுயிர் உரக்கிடங்கி உள்ளது. இங்குள்ள குப்பை கிடங்கில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது.பலத்த காற்றின் காரணமாக தீ மள,மள,வென பரவியது .

அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது .இது குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கோவை மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரைக்கு தகவல் கொடுத்தார். மாவட்டதீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை மேற்பார்வையில் உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி முருகன் தலைமையில் 3 தீயணைப்பு இன்ஜின்களுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்..

தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம் எல் ஏ ),சம்பவ இடத்துக்கு சென்று தீயணைக்கும் பணியை மேற்பார்வையிட்டார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்..