கோவை இருகூரில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு – பட்டப் பகலில் துணிகரம்..!!

கோவை அருகே உள்ள இருகூர் ,கல்யாண கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் செல்வன். இவரது மனைவி சுகுணா( வயது 39 )இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார் .பகல் 11 மணி அளவில் 3ஆசாமிகள் இவரது வீட்டினுள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சுகுணாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து சுகுணா சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார். பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவம் இருகூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..