புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: ஒரே நேரத்தில் 48 வாகனங்கள் சேதம் ..!

புனேவில் உள்ள புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நாவலே பாலத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தில் சுமார் 48 வாகனங்கள் சேதமடைந்தன.

நேற்று மாலை பாலத்தின் கீழ்நோக்கிய சரிவில் லாரி மோதியதால் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றாக மோதிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விபத்து நேவல் பாலத்தில் நிகழ்ந்ததாகவும், டிரக்கின் பிரேக் செயலிழந்ததாலோ அல்லது அதன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாலோ இது நிகழ்ந்து இருக்க கூடும் என்று கூறினார்.

முதற்கட்ட தகவல்களின்படி, லாரி பிரேக் செயலிழந்து இருக்கலாம் அல்லது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக டிரக் இந்த வாகனங்களில் மோதியதி இருக்கலாம். இதில் குறைந்தது 40 வாகனங்கள் சேதமடைந்துள்ளன” என்று சிங்காட் சாலை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.