ஓவர் குடியால் காருக்குள் வாலிபர் மரணம்..

கோவை போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம், எம்.ஜி..ஆர் நகர் சேர்ந்தவர் துரைசாமி (வயது 40 )இவர் நேற்று தனது உறவினர் ரவிக்குமார் என்பவருடன் காரில் அங்குள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். அங்கு அளவுக்கு அதிகமாக மது அருந்தினார்.இதனால் அவரால் நிற்க முடியவில்லை.இந்த நிலையில் துரைசாமியை ரவிக்குமார் காரில் ஏற்றிக் கொண்டு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீட்டுக்கு சென்றதும் அவரை எழுப்பினார். அவர் எழும்பவில்லை ஓவர் குடியால் காருக்குள்ளே இறந்துவிட்டார் .இது குறித்து அவரது மனைவி முத்துலட்சுமி செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.