கோவை தனியார் பெண் ஊழியரை சினிமாவுக்கு அழைத்து செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பிய கேஷியர் கைது..!

கோவை புலியகுளம், ஈஸ்வரன் லே-அவுட்டை சேர்ந்தவர் சித்தார்த் .இவரது மனைவி ஜெய் ஸ்ரீ (வயது 38) இவர் ராம்நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரை அதே நிறுவனத்தில் கேஷியராக வேலை பார்த்து வந்த எஸ். எம். பாளையம் .பாலாஜி கார்டனைச் சேர்ந்த பார்த்தசாரதி ( வயது 55) என்பவர் சினிமாவுக்கு அழைத்தாராம். பின்னர் செல்போனில் அவருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பினார். இதை கண்டித்த ஜெய் ஸ்ரீயை செல்போனில் மிரட்டினாராம். இது குறித்து ஜெய்ஸ்ரீ காட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் விசாரணை நடத்தி கேஷியர் பார்த்தசாரதியை நேற்று கைது செய்தார் .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..