பெண் ஊழியரின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரவ விடுவதாக மிரட்டிய சூப்பர்வைசர், விற்பனை மேலாளர் கைது..!

கோவை பேரூர் செட்டிபாளையம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்.இவரது மனைவி ரம்யா (வயது 31 ) இவர் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வருபவர் நிலக்கோட்டை காமராஜரை சேர்ந்த சிலம்பரசன் (வயது 32) தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த மதன் ( வயது 31)இவர்கள் இருவரும் அந்த பெண்ணின் போட்டோவை எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விடுவதாக மிரட்டினார்களாம்.. இது குறித்து ரம்யா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து சிலம்பரசன் (வயது 32), மோகன் (வயது 31) ஆகியோரை நேற்று கைது செய்தார் . இவர்களின் சிலம்பரசன் அந்த துணிக்கடையில் சூப்பர்வைசராகவும், மதன் விற்பனை மேலாளராகவும் பணியாற்றி வந்தனர். இவர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், கொலை மிரட்டல் உட்பட பிரிவின்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..