அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீடு, கரூர், கோவை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை !!!

அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீடு, கரூர், கோவை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை !!!

கரூர் – கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற் சாலை, கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சூப்ரவைசர் முத்துபாலன் என்பவர் வீட்டில் கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

கோவை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் பத்துக்கு மேற்பட்ட சி.ஆர்.பி.எப் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர். மேலும் 20 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக நேற்று (ஆக.2) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தி.மு.க ஒன்றிய செயலாளர் வீடு மற்றும் அலுவலகம் பண்ணை வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை தொடர்ந்து கரூர், கோவையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மதுபானக் கூடங்கள் நடத்துவதற்கான அனுமதி வழங்க பணம் வசூலித்து தந்ததாக சாமிநாதன் மீது புகார் எழுந்த நிலையில், இந்த சோதனை நடந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் கரூரில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு, கரூர், கோவை உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீடு, கரூர், கோவை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை !!!

கரூர் – கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற் சாலை, கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சூப்ரவைசர் முத்துபாலன் இல்லம் மற்றும் கோவை – திருச்சி சாலையில் உள்ள அருண் அசோசியேட் அலுவலகம் மற்றும் இதன் உரிமையாளர் அருண் இல்லம் ஆகிய மூன்று இடங்களில் கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

கோவை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில்
பத்துக்கு மேற்பட்ட சி.ஆர்.பி.எப் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர். மேலும் 20 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக நேற்று (ஆக.2) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தி.மு.க ஒன்றிய செயலாளர் வீடு மற்றும் அலுவலகம் பண்ணை வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை தொடர்ந்து கரூர், கோவை இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மதுபானக் கூடங்கள் நடத்துவதற்கான அனுமதி வழங்க பணம் வசூலித்து தந்ததாக சாமிநாதன் மீது புகார் எழுந்த நிலையில், இந்த சோதனை நடந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் கரூரில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு, கரூர், கோவையில் மொத்தம் மூன்று இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.