கோவை மத்திய சிறையில் கைதி திடீர் மரணம்..

கோவை : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், எம். ஜி. ஆர். நகரை சேர்ந்தவர் திருப்பதி (வயது 48 ) இவர் 2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு மோசடி வழக்கில் பொருளாதார குற்றத் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு 12-7. 2022 முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். நேற்று இவருக்கு சிறையில் திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து ஜெயிலர் சரவணகுமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..