வாக்கு கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு..!

கோவை செல்வபுரம் ,பேரூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி மல்லிகா ( வயது 70) நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.. அப்போது ஒரு ஆசாமி தேர்தல் பிரச்சார நோட்டீஸ் கொடுப்பது போல மூதாட்டியின் வீட்டுக்கு சென்றார். அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். மூதாட்டி வீட்டுக்குள் சென்ற போது பின் தொடர்ந்து சென்று அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு அந்த ஆசாமி தப்பி ஓடி விட்டார் . இது குறித்து மல்லிகா செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..