தூக்கு போட்டு ஸ்டுடியோ அதிபர் தற்கொலை..

பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன் புதூரில் உள்ள கசாப்பு கடை வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கமல் ராஜ் (வயது 27 )இவர் அம்பராம்பாளையத்தில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார்.இதற்காக தனக்கு தெரிந்த உறவினர்களிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.இந்த பணத்தை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வரும் அடைந்த கமல் ராஜ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் நைலான் கயிற்றை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை ரவிச்சந்திரன் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.