பொங்கல் விழாவில் வாலிபர் மீது கல்வீச்சு தாக்குதல்- சிறுவன் உள்பட இருவர் மீது வழக்கு..!

கோவை, பொன்னையராஜபுரம் பகுதியில் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கணேஷ் குமார் காயங்களுடன் வீட்டிற்கு வந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் தனது மகனிடம் எதனால் காயம்பட்டது என்று கேள்வி எழுப்பினார். அப்போது கணேஷ்குமார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு சென்ற போது சில நபர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் தன்னை கல்லால் அடித்து விட்டதாக கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து காயமடைந்த கணேஷ்குமாரை அவரது தந்தை அழைத்துச் சென்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தொடர்ந்து முருகன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சஞ்சய், 17 வயது சிறுவன் மற்றும் கார்த்திக் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.