அடமானம் வைத்த காரை திரும்பிக் கொடுக்காதவர் மீது கார் உரிமையாளர் புகார்..!

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ராஜமாணிக்கம். இவர் கோவை கரும்புக் கடை பகுதியைச் சேர்ந்த இமாம் அலி என்பவரிடம் ஐந்து மாதத்திற்கு முன்பு தனது காரை ரூபாய் ஒரு லட்சத்து 65 ஆயிரத்துக்கு அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜமாணிக்கம் பெற்ற பணத்தை திரும்பி கொடுத்து காரை மீட்க முயன்றார். ஆனால் இமாம் அலி காரை தர மறுத்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் இமாம் அலி மீது குனியமுத்தூர் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்