ஓடும் அரசு பஸ்சில் மருத்துவமனை பெண் ஊழியரிடம் 3 பவுன் நகை திருட்டு..!

கோவை புலியகுளம், அம்மன் குளம், அலமேலுமங்கம்மாள் லேஅவுட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் .இவரது மகன் சாலினி (வயது 23) இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று அரசு டவுன் பஸ்சில் தாமு நகரிலிருந்து பாப்பநாயக்கன்பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார் . புலிகுளத்துக்கும்-லட்சுமி மில் சந்திப்புக்கும் இடையே பஸ் சென்ற போது இவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை காணவில்லை. யாரோ பஸ்சினுள் திருடிவிட்டனர். இது குறித்து சாலினி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.