கோவை கல்லூரி மாணவர் தங்கியிருந்த வீட்டில் பூட்டை உடைத்து லேப்டாப் திருட்டு.

Thief stealing laptop computer

கோவை அருகில் உள்ள குனியமுத்தூர் பி .கே. புதூர் ,குளத்துப்பாளையம் ரோட்டில் உள்ள ராமானுஜம் நகரில் வசிப்பவர் விஜய் வெங்கடாசலபதி ( வயது 19) இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 2 லேப்டாப்களை காணவில்லை . யாரோ திருடிவிட்டனர் .இது குறித்து விஜய் வெங்கடாசலபதி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.