நள்ளிரவில் தோட்டத்தில் புகுந்து ஆடுகள் திருட்டு – மர்ம நபருக்கு வலை.!!

கோவை குனியமுத்தூர் அபிராமி நகரை சேர்ந்தவர் ராஜகுரு ( வயது 37) விவசாயி. இவரது தோட்டத்தில் வளர்த்த வந்த 5 ஆடுகளை காணவில்லை..யாரோ இரவில் திருடி சென்று விட்டனர் . இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் இருக்கும்.இது குறித்து ராஜவேல் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.