ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.!!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக மீன்பிடிக்க செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக சிறைபிடிப்பது, படகுகளை அரசுடைமையாக்குவது போன்ற சட்டங்களை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில்

நேற்றைய தினம் ராமேஸ்வரத்திலிருந்து 500 மேற்பட்ட விசைப்படகில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது நள்ளிரவில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். அதுமட்டுமல்லாமல் 10க்கும் மேற்பட்ட படகில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி வீசி இப்பகுதிக்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்றும் எச்சரித்தனர். இதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் படகு ஒன்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 நஷ்டத்துடன் வீடு திரும்பினர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.