தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை..!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மண்டபம் பகுதி மீனவர்கள் நெடுந்தீவு அருகே வழக்கம் போல் மீன் பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 9 தமிழக மீனவர்களை கைது செய்தனர். மேலும் 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் காங்கேசன் துறை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது.

அங்கு வைத்து தமிழக மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் மண்டபம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.