திமுக ஆட்சியை அகற்றுவதற்காக சாதி, மதக் கலவரத்தை தூண்ட சிலர் முயற்சி – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்டத்தில் புதிய மாநகராட்சி அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திமுக ஆட்சியை அகற்றுவதற்காக சாதி கலவரம், மதக்கலவரத்தை தூண்டலாமா என சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைத்து தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று வருகிறோம். தமிழ்நாட்டை மட்டுமல்ல நாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும், இதற்கு அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.