டிராக்டரில் பைக் மோதி சாப்ட்வேர் என்ஜினியர் பலி..

கோவை : கர்நாடக மாநிலம் பெங்களூர்,தனி சந்திராவை சேர்ந்தவர் சுகுணா நந்தா.இவரது மகன் அஸ்வல் (வயது 26) ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று நிலை தடுமாறி அங்கு சென்று கொண்டிருந்த டிராக்டரின் பின்பகுதியில் பைக் மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் . இது குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.