கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடியவரை துரத்தி பிடித்த சிங்க பெண் போலீஸ்- எஸ்.பி பாராட்டு..!

கோவை நீதிமன்ற வளாகத்தில் நேற்று கவிதா என்ற பெண் மீது ஆசிட் வீசிவிட்டு அவரது கணவர் சிவகுமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது ஆனைமலை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் இந்துமதி கோர்ட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் சிவக்குமார் தப்பி ஓட முயன்றதை பார்த்ததும் விரைந்து செயல்பட்டு அவரை துரத்திச் சென்று மடக்கினார்.உடனே வக்கீல்களும் ஓடி வந்து சிவகுமாரை சுற்றி வளைத்து பிடித்தனர். தப்பியோட முயன்ற சிவக்குமாரை துணிச்சலுடன் விரட்டி பிடித்த ஆணைமலை பெண் போலீஸ் இந்துமதியை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரநாராயணன் நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு ரூ 5 ஆயிரம் பரிசு வழங்கினார்..