சிங்காநல்லுர் அரசு பள்ளி ஆசிரியை திடீர் மாயம்..!

கோவை சிங்காநல்லூர் எஸ். ஐ ,எச் .எஸ் .காலனி மகாத்மா காந்தி ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி சாந்தா ( வயது 59 )இவர் கோவையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார் .கடந்து சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அவர் திடீரென்று மாயமாகிவிட்டார் .இது குறித்து அவரது மகன் குமரேசன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.