சித்தியை கத்தியால் குத்தி கொலை – 16 வயது சிறுவன் கைது.!!

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயது மீன் வியாபாரி. இவருக்கு திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகன் உள்ளார் .அவன் தனது தந்தையுடன் சேர்ந்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் மீன் வியாபாரி கனகா (வயது 35 )என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் . அவருக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது .இந்த நிலையில் சிறுவனின் தந்தை அடிக்கடி தனது முதல் மனைவி மற்றும் சிறுவனை அடித்து துன்புறுத்தி வந்தார். இது தொடர்பாக சிறுவன் தனது சித்தி கனகாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கனகாவின் வீட்டிற்கு சிறுவன் சென்றுள்ளார். அங்கு கனகா தூங்கிக் கொண்டிருந்தார் . அதை பார்த்து சிறுவன் கனகாவை எழுப்பி உங்களால்தான் என் தாய் மிகவும் கஷ்டப்படுகிறாள். எனது தந்தையும் எங்களை அடிக்கிறார் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன் அந்த வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து கனகாவை சரமாரியாக குத்தினான்.. இதில் கனகா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நித்யா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சித்தியை கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.