விற்பனைக்கு வைத்து இருந்த கஞ்சா பறிமுதல – 3 வாலிபர்கள் கைது..!

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை வைத்து இருந்த கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்த ராகுல் (26), அதே பகுதியை சேர்ந்த கிரிதர் (24) மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த யுவநந்து (21) ஆகிய 3 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 2.400 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைந்தார்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.