நசரத் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.!!

ஆவடி: காஞ்சிபுரம் மாவட்டம் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி டி சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தகுமார் சில தினங்களுக்கு முன்பு புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வந்தார். இந்த நிலையில் மப்பேடு சஞ்சீவி, கட்சிப்பட்டு சாந்தகுமார்,கடம்பத்தூர் சரத்குமார், வெள்ளவேடு ஜெகன், மண்ணூர் சூர்யா, செல்வம் உள்ளிட்ட ஏழு பேரையும் ஆயுதங்கள் வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர். நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரித்தபோது சாந்தகுமார் மயங்கி விழுந்ததாக கூறி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். சாந்தகுமாரை போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் சாந்தகுமார் உடன் கைதான ஆறு பேரும் நீதிபதியிடம் நசரத் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் அடித்து சித்திரவதை செய்ததால் சாந்தகுமார் உயிர் இழந்ததாக வாக்கு மூலத்தில் கூறி உள்ளனர் . இதனை அடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்துள்ளார்..