அதிர்ச்சி செய்தி… கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது 5 தொழிலாளர்கள் பலியான சோகம்..

ழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

பர்பானி மாவட்டம் சோன்பெத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பௌச்சா தாண்டா பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆறு தொழிலாளர்கள் உள்ளே இறங்கினர்.

தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆறு பேரும் அங்கேயே மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவர்களில் 5 தொழிலாளர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொரு தொழிலாளியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சோன்பெத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..