பளபளக்கும் கட்டு கட்டுகளாய் கரன்சி நோட்டுகள்… பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ. 91 லட்சத்து 50 ஆயிரம்.!!

பூந்தமல்லி : உ ரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பளபளக்கும் கரன்சி நோட்டுக்கள் ரூ 91 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறக்கும் தேர்தல் படையினர் பறிமுதல் செய்தனர் இதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் ஐயோ அம்மா ரூபாய் நோட்டுக்கள் கண்ணை உறு த்துகிறதே என வாயைப் பிளந்தனர் . இது பற்றிய விவரம் வருமாறு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 91 லட்சத்து 50 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர் . இந்த பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது இதை ஒட்டி தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதை யோட்டி வாக்காளர்களுக்கு பணமோ பரிசுப் பொருட்களோ வழங்குவதை தடுக்கும் பணியில் பறக்கும் படையினர் கண்காணிப்புக்கு குழுவினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பூந்தமல்லி தொகுதியில் கண்காணிப்பு குழுவினர் மற்றும் போலீசார் பூந்தமல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு வேன்களை கையை காட்டி நிறுத்தினர் அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 83 லட்சத்து 96 ஆயிரம் பறிமுதல் செய்தனர். வெளியூர் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர் . இதேபோல் திருநின்றவூர் தனியார் கல்லூரி அருகே ரூபாய் இரண்டு லட்சத்து 50 ஆயிரத்து கொண்டு சென்ற வாகனத்தை மறித்து சோதனை போட்டனர். புத்தகரம் பகுதியைச் சேர்ந்த குமரவேல் திருவள்ளூரில் இருந்து சென்னை அண்ணா நகருக்கு திரும்பி கொண்டிருந்தார். திருநின்றவூர் கல்லூரி அருகே வரும்போது தேர்தல் பறக்கும் படையினர் ரூபாய் 2 லட்சத்து ஐம்பதாயிரத்தை பறிமுதல் செய்தனர் பாரி முதல் செய்த அனைத்து பணத்தையும் கரு உலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது..