கழுத்தில் தனக்குத்தானே கத்தியால் குத்தி சவர தொழிலாளி தற்கொலை..

கோவை செல்வபுரம், முத்துசாமி காலனியை சேர்ந்தவர் பிப்லாப் சுரல் (வயது 33) இவர் செல்வபுரத்தில் உள்ள ஒரு சலூன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார் .கடந்த சில ஆண்டுகளாக இவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார். மன நலன் பாதிப்பு சரியாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த பீப்லாப் சுரல் கத்தியை எடுத்து அவரது கழுத்தில் தனக்கு தானே பலமுறை குத்திக் கொண்டார் .இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை அளித்து பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.