கோவில் நிலத்தில் அத்துமீறி நுழைந்து காம்பவுண்ட் சுவர், மேற்கூரை உடைப்பு – 25 பேர் மீது வழக்குபதிவு.!!

கோவை சுங்கம் திருச்சி ரோட்டில் புனித மைக்கேல் ஆலயத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் கடந்த 17ஆம் தேதி 25 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி புகுந்தது. அங்கிருந்த காம்பவுண்ட் சுவர், மேற்கூரை ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது .இது குறித்து பெரிய கடை வீதியில் உள்ள மைக்கேல் ஆலய பாதிரியார் அருண் தலைமையில் பாதிரியார்கள் மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார்.. இதன் பேரில் ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக சரவணன். சிவக்குமார்,டெஸ்க் பாண்டி உட்பட 25 பேர் மீது கொலை மிரட்டல், சேதப்படுத்துதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.