கோவை வியாபாரி வீட்டில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட் திருடிய வேலைக்கார பெண் கைது..!

கோவை ஆர் .எஸ். புரம், சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் ( வயது 46 )மயில் மார்க் சம்பா ரவை வியாபாரம் செய்து வருகிறார்.இவர்கள் வெளியே சென்ற போது வீட்டில் பீரோவில் இருந்த 150 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட் திடீரென்று காணாமல் போனது .இது குறித்து வியாபாரி பொன்முருகன் ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், முத்துசாமி செட்டி வீதியை சேர்ந்த சிவராமன் மனைவி ஜோதி ( வயது 47) என்பவர் திருடியது தெரியவந்தது .இதையடுத்து ஜோதி கைது செய்யப்பட்டார் .150 கிராம் கோல்டு பிஸ்கட் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 12 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும் .கைது செய்யப்பட்ட ஜோதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.