கோவையில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு -பைக் ஆசாமி கைவரிசை..!

கோவை ஆர். எஸ். புரம் .லாலி ரோடு, திருமூர்த்தி லே-அவுட்டை சேர்ந்தவர் குல்சந்த் ஜெயின்.வியாபாரி.இவரது மனைவி சுசிலா பாய் ( வயது 72) இவர் நேற்று,அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி இவர் கழுத்தில் கிடந்த 12 கிராம் எடை கொண்ட தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டான்.இது குறித்து சுசிலா பாய், ஆர். எஸ். புரம். போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..